#BREAKING: உ.பி வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது – முதல்வர் மு.க ஸ்டாலின்!

போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உ.பி மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். … Read more

#Breaking:உ.பி வன்முறை…நாடு முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..!

உத்தரப்பிரதேச மாநில வன்முறையை கண்டித்து,நாடு முழுவதும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு  மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில், அம்மாநில துணை முதல்வர் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்,அவருக்கு கருப்புக்கொடி காட்ட விவசாயிகள் முயன்றனர். அப்போது, விவசாயிகள் … Read more

4 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.45 லட்சம் – ஏடிஜிபி பிரசாந்த் குமார்..! 

நேற்று உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ. 45 லட்சம் அரசு வேலை வழங்கப்படும் என ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறினார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தை உத்திரபிரதேசம் லக்கிம்பூரை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நேற்று லக்கிம்பூரில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்க அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக கூறப்பட்டது. இதனால், துணை முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் … Read more

பிரியங்கா காந்தி விளக்குமாறால் அறையை சுத்தம் செய்யும் காட்சி வெளியானது..!

தடுப்புகாவலில் உள்ள பிரியங்கா காந்தி தனது அறையினை விளக்குமாறால் சுத்தம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது உத்தரபிரதேச போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்துள்ளனர். இதையெடுத்து, இன்று காலை உத்திரப்பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரியங்கா … Read more

Lakhimpur violence:மத்திய அமைச்சரின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்து மற்றும் வன்முறை காரணமாக மத்திய அமைச்சரின் மகன் உடன்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு. உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட … Read more