விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது!

farmers protest

Farmers protest : மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த 13ம் தேதி டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை தொடங்கினர். Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் … Read more

விவசாயிகள் போராட்டம் – அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை!

amit shah

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளார். அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம், பயிர் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், பயிர் கடனை தள்ளுபடி என 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் பேரணி போராட்டத்தை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், விவசாய அமைப்பினர் மற்றும் … Read more

டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

farmer death

பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர்  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் பயிர்களுக்கான விலை நிர்ணயம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் இழப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ‘டெல்லி சலோ’ என்று தலைநகரை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க டிராக்டர் மூலம் பேரணியாக டெல்லியை நோக்கி படையெடுத்து வரும் விவசாயிகள்  பஞ்சாப்-ஹரியானாவின் ஷம்பு எல்லையில் குவிந்து வருகின்றனர். இதனால் … Read more

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்!

Bharat Bandh

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் இன்று தொடங்குகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம், கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் மற்றும் மின்சார திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உள்ளிட்ட பல மாநில விவசயிகள் தேசிய தலைநகர் டெல்லியை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் … Read more

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்- மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா..!

Arjun Munda

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடத்துவோம் என சமீபத்தில் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்க தலைவர் உடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் அர்ஜூன் முண்டா பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில்  இந்த முடிவும் எட்டப்படவில்லை, இதனால் திட்டமிட்டபடி டெல்லி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனர். நேற்று முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தர … Read more

இரவு பகலாக தடுப்புகள் அமைப்பு… டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம்!

farmers protest

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 விவசாய சங்கத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்பாகவே விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று டெல்லியை நோக்கி ‘சலோ டெல்லி’ பேரணியை விவசாயிகள் தொடங்கினர். கடந்த 2020ல் நடைபெற்ற மிகப்பெரிய தொடர் போராட்டம் போன்று இம்முறை மாறிவிட கூடாது என்பதால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க முன்பு இல்லாத … Read more

விவசாயிகள் போராட்டம்.! டெல்லி மைதானத்தில் சிறைச்சாலை.. அனுமதி மறுத்த மாநில அரசு.!

delhi govt

விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு … Read more

உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி… விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு!

fire tear gas

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், 144 உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் அறிவித்தப்படி, இன்று காலை முதல் டெல்லியை … Read more

விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? போராட்டத்துக்கான காரணம் இதுதானா…

farmers protest

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது மத்திய … Read more

பேச்சுவார்த்தை தோல்வி.. திட்டமிட்டபடி விவசாயிகள் போராட்டம்.! உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி.!

Delhi Farmer Protest 2024

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடினர். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது அதே போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் … Read more