நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

Farmers Protest: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் டெல்லிக்குள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக பஞ்சாப்-அரியானா எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க்கடன் தள்ளுபடி, எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் கடந்த மாதம் 13ம் தேதி டெல்லியை நோக்கி சலோ டெல்லி என்ற பேரணியை தொடங்கினர். Read More – உலக அழகிப்போட்டியில் … Read more

நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்! விவசாய சங்கங்கள் அறிவிப்பு

Farmers Protest: இந்தியா முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்கள் பஞ்சாப் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனிடையில் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தடையை மீறி … Read more

விவசாயிகள் போராட்டம்! ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மீண்டும் இணைய சேவை தொடக்கம்

விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியிருந்த நிலையில் தற்போது அந்த 7 மாவட்டங்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, பேரணிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே, அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி அம்பாலா, … Read more

Tamil News Today Live : நிறுத்தப்பட்ட விவசாயிகள் போராட்டம்.. தேர்தல் அரசியல் நகர்வுகள்…

Today Live 24 02 2024

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி சலோ எனும் போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள் , நேற்று தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். இருப்பினும் ஹரியானாவின் ஷம்பு எல்லை மற்றும் பஞ்சாப்பின் கானௌரி ஆகிய இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள் என கூறப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் குறித்து தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் பல்வேறு அரசியல் நகர்வு தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

விவசாயிகள் பிரச்சனையில் உண்மையாக செயல்படுகிறோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு உண்மையாக செயல்பட்டு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தங்கள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டம் குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் மோடி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறினார். செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசு 3 … Read more

உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை.! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.!

Farmers Protest One Died

வேளாண் விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்யும்படி நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்பது உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் வருவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து,  கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் விவசாயிகளை தடுத்து வருகின்றனர். இதனால் , எல்லை பகுதிகளில் பெரும் பதற்ற நிலை நிலவிவருகிறது. ReadMore – … Read more

Tamil News Today Live : தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்… தேர்தல் அரசியல் நகர்வுகள்…

Today Tamil News Live 23 02 2024

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பஞ்சாப் , ஹரியானா எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஹரியானா, ஷம்பு பகுதியில் போராடி வரும் விவசாயிகள் சிலர் மீது ஹரியானா காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் பிரதான கட்சிகள் மக்களவை தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனுக்களை அளித்து வருகிறது. அதே போல ஆலோசனை கூட்டங்களையும் … Read more

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 22 வயது விவசாயி..! இறப்பதற்கு முன் பேசிய உருக்கமான வார்த்தைகள்

விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் நடந்த மோதலில் 22 வயதான விவசாயி உயிரிழந்த நிலையில் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் இறுதியாக பேசிய வார்த்தைகள் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர். போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க டெல்லி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். … Read more

Tamil News Live : விவசாயிகள் போராட்டம் முதல்… மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள் வரை…

Today Tamil News Live 21 02 2024

வேளாண் விளைபொருட்களுக்கு குறைநதபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் இன்று தங்கள் போர்ட்டத்தை மீண்டும் டெல்லி நோக்கி ஆரம்பித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுக கட்சி சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று விருப்ப மனுக்களை பெற உள்ளனர். இவ்வாறான பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து நேரலையில் காணலாம்…  

திட்டமிட்டபடி நாளை டெல்லியை நோக்கி பேரணி – விவசாயிகள்

delhi chalo

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கடந்த 13ம் தேதி டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியை நோக்கி பேரணி தொடங்கினர். இதனால் டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் நுழையவிடாமல் தீவிர தடுப்புகள் அமைக்கப்பட்டு, கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இருப்பினும், … Read more