ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்களை மறைக்க போலீசார் முயற்சி – காங்கிரஸ் புகார்.!

தாக்குதலை நடத்தியது ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை மறைக்க டெல்லி போலீசார் மறைக்க முயற்சி செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக ஒன்பது பேரின் பெயர்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் ஆயிஷி கோஷ் பெயர் இடம் பெற்று உள்ளது . கடந்த ஐந்தாம் தேதி ஜே.என் யூ பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் சங்க தலைவி ஆயிஷி கோஷ்  படுகாயமடைந்தார். மேலும் 20 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியதாக … Read more

கட்டண உயர்வு மற்றும் ஆடை கட்டுப்பாடுகளை எதிர்த்து டெல்லி மாணவர்கள் போராட்டம்! போலீசார் குவிப்பு!

டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உல்ளது. அங்கு சிறப்பு விருந்திரைனராக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கொள்ளவுள்ளார். இந்நிலையில் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அக்கல்லூரியில் கல்விக்கட்டணம்  ஏற்றப்பட்டதற்கும், கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ள துணி கட்டுப்பாடு விதிமுறைகளுக்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.