சதமடித்து..அதித பலத்துடன் நுழையும் பாஜக!! மாநிலங்களவை பராக்!

மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவின் பலமானது தற்போது 86 ஆக உயர்ந்து உள்ளது.மேலும் காங்கிரசின் பலம் ஆனது 41 ஆக குறைந்துள்ளது இது குறித்த செய்தியின் விவரம் இதோ: மாநிலங்களவையில் நடப்பாண்டிற்கான காலியான 61 இடங்களுக்கு தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டது. அதில் 42 உறுப்பினர்கள் மார்ச் மாதத்திலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மீதமுள்ள 19 இடங்களுக்கான தேர்தல் நாட்டை உலுக்கி எடுத்து வரும் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த 19 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் … Read more

இத்தாலியில் ஒரே நாளில் 625 பேர் உயிரிழப்பு..!

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது. மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் 12,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் சீனாவை தொடர்ந்து, இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்துகொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவுவதை தவிர்க்க, அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு பல தடைகளை விதித்துள்ளது. அவசர தேவைகளை தவிர்த்து … Read more

#Breaking டெல்லி வன்முறை- பலி எண் 45ஆக உயர்வு..!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இதனைதொடர்ந்து, இதில் பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.