இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை…. அதன் பின் நடந்த துயர சம்பவம்!

இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை, மருத்துவமனை கூட்டிச்சென்ற பின் உயிரிழந்ததால் சோகத்தில் குடும்பத்தினர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ரூகர் எனும் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தம்பதிகள் தங்களது இரண்டு வயது குழந்தை சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் சென்ற நேரம் அந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை. எனவே அங்கிருந்த கமெண்டர் தான் அந்த குழந்தையை பரிசோதித்துள்ளார். பின் அவர் குழந்தை ஏற்கனவே … Read more

கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்டு கொள்ளை – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா நோயாளிகளை கட்டிப்போட்டு சென்னையில் நடந்த நகை கொள்ளை. சென்னை தியாகராயநகரில் சாரதாம்பாள் எனும் தெருவில் உள்ள யாகூப் என்பவர் குடும்பத்தில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர்கள் குடும்பத்துடன் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டில் அனைவரும் குடும்பத்தோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அனைவரையும் கட்டிப் போட்டு வீட்டில் இருந்த 95 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், 250 சவரன் நகைகளையும் மற்றும் வீட்டு வாசலில் இருந்த கார் … Read more

2019-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கிய டாப் 10 தலைப்புகள்.!

கூகுள் நிறுவனம் ஆண்டு இறுதியில் சிறந்த தலைப்பின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். 2019-ம் ஆண்டின் அரசியல் மற்றும் பல்வேறு சிறப்பு குறித்து 10 நிகழ்வுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்டு இறுதியில் அதிக தேடப்பட்ட முக்கிய தலைப்புககளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடும். அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு அரசியல் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தற்போது கூகிள் 2019-இல் கூகுளில் முக்கிய தலைப்புககளின் முதல் 10 தலைப்பின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் … Read more

பிறந்த குழந்தையை தவறி கீழே விட்ட சம்பவம்……உறவினர்கள் போராட்டம்…!!

கோவையை சேர்ந்தவர்கள்  பவித்ரா மற்றும் விக்ரம் தம்பதியர். இதில்  பவித்ரா_வுக்கு  கடந்த சனிக்கிழமை பிரசவவலி எடுத்து கோவை ஆவாரம்பாளையத்தில்  உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு முதல் நல்ல உடல்நிலையில் இருந்த குழந்தை இன்று பிற்பகல் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இதையடுத்து இறந்த குழந்தை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்வதற்காக சென்றுள்ளனர். அடக்கம் செய்யும் இடத்தில் குழந்தையின் தலையில் இரத்த காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  … Read more