‘அம்மா தூங்குவதாக நினைத்தேன்’ – 2 நாட்கள் இறந்த தாய் மற்றும் சகோதரனின் சடலத்தோடு இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…!

இறந்த தனது தாய் மற்றும் சகோதரனுடன் 47 வயது மதிக்கத்தக்க ஸ்ரீலக்ஷ்மி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இரண்டு நாட்கள் இருந்துள்ளார். பெங்களூரில், ராஜராஜேஸ்வரி நகருக்கு அருகில் உள்ள ஒரு பிளாட்டில் இறந்த தனது தாய் மற்றும் சகோதரனுடன் 47 வயது மதிக்கத்தக்க ஸ்ரீலக்ஷ்மி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இரண்டு நாட்கள் இருந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அந்த பிளாட்டில் வசிக்கும் பிரவீன் என்பவர் ராஜராஜேஸ்வரி நகர் போலீசாரை அணுகி தகவல் கொடுத்துள்ளார். … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 4,120 பேர் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,120  பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுபடுத்தும் நோக்கில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த … Read more

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…! 3 பேர் பலி…!

கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து.  கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த … Read more

கொரோனா காரணமாக தன் கர்ப்பிணி மனைவியையும் பிறக்காத குழந்தையையும் இழந்த கணவர்..!

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவின் ஆபத்துகளை பற்றி தனது கர்ப்பிணி மனைவி பேசும் வீடியோவை ரவிஷ் சாவ்லா பதிவேற்றியுள்ளார். மருத்துவர் டிம்பிள் அரோரா 7 மாத கர்ப்பிணி பெண் ஆவார். இவர் ஏப்ரல் 11-ஆம் தேதி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது இயலாமையிலும் ஏப்ரல் 17-ஆம் தேதியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘கொரோனாவை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். … Read more

‘பாஸ் என்ற பாஸ்கரன்’ பட நடிகர் கொரோனா தொற்றால் காலமானார்….!

பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை காலமானார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக பிரபலங்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன். கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக இவருக்கு கொரோனா … Read more

கொரோனா தொற்றால் தொடரும் செவிலியர்களின் மரணம்…!

சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது, கவலை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. அந்த வகையில், சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு … Read more

கேரள வரலாற்றில் புகழ்பெற்ற அரசியல்வாதி 101-வது வயதில் காலமானார்….!

கேரளாவின் மூத்த கம்ம்யூனிஸ்டும், ஜனதிபத்ய சமரக்ஷன சமிதியின் தலைவருமான  கே.ஆர்.கௌரி அம்மா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.   கேரளாவின் மூத்த கம்யூனிஸ்டும், ஜனதிபத்ய சமரக்ஷன சமிதியின் தலைவருமான  கே.ஆர்.கௌரி அம்மா (101) அவர்கள், கடந்த சில வாரங்களாக, வயது மூப்பு தொடர்பான வியாதியால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை, முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா ஆகியோர் சமீபத்தில், மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், கௌரி அம்மா … Read more

இந்தியாவில் படிப்படியாக குறையும் தொற்று பாதிப்பு…! 3.66 லட்சம் பேருக்கு தொற்று உறுதி…! 3,754 பேர் உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754  பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு மாநில அரசும் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3,754  பேர் உயிரிழந்துள்ளனர். 3,53,818 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் … Read more

பிறந்தநாள் வீட்டில் துப்பாக்கி சூடு – கொலையாளி உட்பட 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் பிறந்த நாளில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பலரையும் சுட்டு விட்டு தானும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கொலராடாவில் நேற்று இரவு ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது உறவினர்களை அழைத்து உள்ளார். அங்கு பலரும் கூடியிருந்த நேரத்தில் திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அனைவரையும் சுட ஆரம்பித்துள்ளார். இவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் … Read more

ஆந்திரப்பிரதேச கல்குவாரியில் குண்டு வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு!

ஆந்திர பிரதேசம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் பாறைகளை வெடிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் உள்ள கடப்பா எனும் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பல தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பாறைகளை வெடிக்க செய்வதற்காக இந்த குவாரியில் உள்ள தொழிலாளர்கள் வெடி பொருட்களை பயன்படுத்துவது வழக்கமாம். அதுபோல இன்றும் பாறைகளை வெடிக்க செய்வதற்காக கிரானைட் கற்களை துளையிட்டு கொண்டு இருந்த பொழுது வெடிக்க செய்வதற்காக … Read more