இபிஎஸ் விவகாரம்; ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – அறப்போர் இயக்கம்

பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறப்போர் இயக்கம் தகவல். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. … Read more

#BREAKING: முன்னாள் முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேச தடை – உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்டஈடு தரக்கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச தடைகோரி, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். அறப்போர் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது. … Read more