நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.? ஸ்மிருதி இரானி பற்றிய கருத்து.! காங்கிரஸ் தலைவர் விளக்கம்.!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி நான் தவறாக பேசவில்லை. தவறான வார்த்தை உபயோகிக்கவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார்.  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர்களுல் ஒருவரான அஜய் ராய் கூறுகையில், உ.பியில் உள்ள ஆமோதி தொகுதியில் போட்டியிடுவாரா என கேட்டுவிட்டு, ‘லட்கா-ஜட்கா’ (பயந்து போதல் என பொருள் படும் வழக்காடு சொல்) என கூறிவிட்டார். இது பாஜகவினர் மத்தியில் பேசு … Read more

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர் – ஒன்றிய அமைச்சர் ராணி!

நாட்டில் 7% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 7 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் நேற்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். மேலும், இதில் 2% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு கோடி குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.