மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  … Read more

#Breaking:வடகிழக்கு பருவ மழை:10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அரசாணை!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் கண்காணிக்கவும் 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, திருச்சி – திரு.ஜெ.ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ் … Read more