#BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி..!

மகாராஷ்டிராவில் புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்தியாவில், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தான் ஓமைக்ரான் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், மகாராஷ்டிராவில் இதுவரை 20 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. … Read more

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போலி நெகட்டிவ் சான்றிதழ் – 4 பேர் கைது!

ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போலி நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரேன் வகை கொரோனா தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. … Read more

இன்று முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – மதுரை மாவட்ட ஆட்சியர்!

இன்று முதல் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனவை ஒழிக்க தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா தீவிரமாக பரவி வருவது மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் … Read more

டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி …!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் கொரோனா வகையாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இது பரவியுள்ள நிலையில், முன்னதாக 32 பேர் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்பொழுதும் ஜிம்பாபே நாட்டில் … Read more

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி..!

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி. ஓமைக்ரான் கொரோனா தொற்று பல இடங்களில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் … Read more

#BREAKING : ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி…!

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  டெல்டா வகை கொரோனா வைரஸை தொடர்ந்து, தற்போது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே இந்தியாவில் 12 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது, ராஜஸ்தான்-9, கர்நாடகா-2, … Read more

மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி …!

மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரக்கூடிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளதுடன், விமான நிலையங்களிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஏற்கனவே 5 பேருக்கு நாடு முழுவதும் ஓமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், … Read more

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உருமாறி ஓமைக்ரான் எனும் வைரஸாக  ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே பெங்களூரில் இரண்டு பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குஜராத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஜிம்பாப்வே நாட்டில் இருந்து … Read more

வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்த 3 பேருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை – அமைச்சர்.மா.சுப்பிரமணியன்!

வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்த 3 பேருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை என அமைச்சர்.மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமைக்ரான் எனும் வகையில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால், தமிழகத்திற்குள் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு … Read more

இலங்கையிலும் ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி ….!

இலங்கையிலும் ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா உருமாற்றம் அடைந்து வெவ்வேறு வகை வைரஸாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் மாற்றமடைந்து வருகிறது. இதற்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் இஸ்ரேல், சிங்கப்பூர், அமெரிக்கா  உள்ளிட்ட … Read more