சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி..!

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி..!

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி.

ஓமைக்ரான் கொரோனா தொற்று பல இடங்களில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு ஓமைக்ரான் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இன்று சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube