இலங்கையிலும் ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி ….!

இலங்கையிலும் ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா உருமாற்றம் அடைந்து வெவ்வேறு வகை வைரஸாக பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் மாற்றமடைந்து வருகிறது. இதற்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் இஸ்ரேல், சிங்கப்பூர், அமெரிக்கா  உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்த வகையில் இந்த வைரஸ் இலங்கையிலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Rebekal