#BREAKING : ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி…!

ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

டெல்டா வகை கொரோனா வைரஸை தொடர்ந்து, தற்போது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே இந்தியாவில் 12 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தானில் 9 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது, ராஜஸ்தான்-9, கர்நாடகா-2, மகாராஷ்டிரா-8, குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.