#Breaking:ஓட்டுநர்களுகளே…இனி இதை தாண்டி பேருந்தை நிறுத்தக் கூடாது – போக்குவரத்துத்துறை போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து ஓட்டுநர்கள்,இனி உரிய பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.குறிப்பாக,பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ,சாலையின் நடுவிலோ பேருந்தை நிறுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும்,பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் சிரமப்படுகிறார்கள் எனவும்,பேருந்து நிறுத்தத்தை தாண்டி நிறுத்தும்போது பயணிகள் ஓடிச்சென்று பேருந்தில் ஏற முயலும்போது பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும்,சில நேரங்களில் மரண தொடர்பான விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது எனவும் கூறி … Read more

#Breaking:இன்று கூடுதலாக 1,450 அரசுப் பேருந்துகள் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து,பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும்,எனினும்,8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதலாக 1450 அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக … Read more

#Breaking:பொங்கல் பண்டிகை…”போக்குவரத்து கழகத்திற்கு ரூ.138 கோடி வருவாய்”- அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் மூலம் சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னிட்டு ஏறத்தால 7 கோடி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் பயணம் செய்துள்ளனர் எனவும்,இதன்காரணமாக,தமிழக போக்குவரத்துத் துறைக்கு சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி,ஜனவரி 11,12,13 ஆகிய … Read more