” ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லவில்லை ” தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேட்டி…!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது , உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீடு பதிவாகி அனைவரும் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டபட்டுள்ளது . அதோடு உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று சொல்லவில்லை . தொடர்ந்து இந்த  வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும்.உச்சநீதிமன்ற உத்தரவு இன்னும் முழுமையக கிடைக்க வில்லை என்று தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment