அதிர்ச்சி : பொது குழுவுக்கு வந்த இருவர் சாலை விபத்தில் பலி..!

திருவண்ணாமலையில் இருந்து பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக வந்த வேன் மீது லாரி மோதி விபத்து. 

இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வேன் ஒன்றில் வந்தனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரை என்ற இடத்தில் செல்லும் பொழுது எதிர் சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி எதிரே வந்த ஆம்னி பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில், லாரியின் டிரைவர், உடன் இருந்த 2 பேர் மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் மற்றும் சென்னை வானகத்தில் நடைபெறும் அதிமுக பொது குழுவில் கலந்து கொள்ள வேனில் சென்ற அதிமுக கட்சியினர் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment