எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா சினிமாவின் மூலம் தான் பிரபலமானார்… அதிமுக எம்.எல்.ஏ அதிரடி கருத்து.!

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் சினிமாவை பின்புலமாக கொண்டு , அதன் மூலம் மக்களிடம் புகழ் பெற்றவர்கள். – அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

இ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். அதில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அதில், ‘ எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் சினிமாவை பின்புலமாக கொண்டு , அதன் மூலம் மக்களிடம் புகழ் பெற்றவர்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை போல ஆட்சி புரிந்து, மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்’  என புகழ்ந்து பேசினார்.

‘ நாங்கள், கடந்த தேர்தலில் ஒட்டு கேட்டு போகையில், அடுத்த முதல்வராக இ.பி.எஸ்-ஐ மீண்டும் தேர்வு செய்யுங்கள் என்றே கேட்டு ஒட்டு கேட்டோம். அப்படி தான் எங்களுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளார். ‘என  தனது பேச்சை தொடர்ந்தார் திண்டுக்கல் சீனிவாசன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment