துரோகம் செய்த ஓபிஎஸ் இனி கட்சிக்கு தேவையா?’ – முன்னாள் அமைச்சர் தங்கமணி

இந்த இயக்கத்தை அழித்துவிடவேண்டும் என்று ஓபிஎஸ் செயல்படுகிறார்; இவ்வளவு துரோகம் செய்தவர் இனி கட்சிக்கு தேவையா என சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் பேசுகையில், இந்த இயக்கத்தை அழித்துவிடவேண்டும் என்று ஓபிஎஸ் செயல்படுகிறார்; இவ்வளவு துரோகம் செய்தவர் இனி கட்சிக்கு தேவையா என சிந்திக்க வேண்டும் என்றும், அதிமுகவை அளிக்க திமுக உதவியுடன் ஓபிஎஸ் முயன்று வருவதாகவும்  குற்றம்சாட்டியுள்ளார்.

 மேலும்,திமுகவை எதிர்க்க வேண்டுமென்றால் வலிமை மிக்க தலைவர் வேண்டும்; அவர்தான் எடப்பாடி பழனிசாமி; திமுகவை எதிர்க்கும் தமிழகத்தின் ஒரே தலைவர் என்பதால்தான் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment