பாஜகவின் பி டீம் வேலையை சீமான் சரியாகச் செய்கிறார்! – ஜோதிமணி எம்.பி

நரேந்திர மோடியை காப்பாற்ற வேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை விமர்சித்து  பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ 50 வருடத்தில் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை ஒருவர் 5 மாதங்கள் நடந்து எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இது வேடிக்கையாக இல்லையா? காலையும் ,மாலையும் அவர் மேற்கொள்வது நடை பயிற்சியே, இதில் என்ன தேச ஒற்றுமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் மோடியை நாங்களும் தான் எதிர்க்கிறோம் மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான நபர் இல்லை என்றும் விமர்சித்திருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு கிடைத்திருக்கும் மகத்தான ஆதரவு பாஜக உள்ளிட்ட பலபேரைத் தொந்தரவு செய்கிறது. நரேந்திர மோடியை காப்பாற்ற வேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது. பாஜகவின் பி டீம் வேலையை சீமான் சரியாகச் செய்கிறார்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment