#BREAKING: ஆண்டுதோறும் 6% மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி!

ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு அனுமதி.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருந்தது. மின் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் 6% மின்கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி மின் கட்டணத்தை 6% உயர்த்திக் கொள்ள தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment