அம்மா நினைப்பு வந்திருச்சு..,கலங்கி நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி.!

Congress Candidate Jothimani

Election2024 : கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜோதிமணி பிரச்சாரம் செய்கையில் தனது அம்மாவை நினைத்து அழுதுவிட்டார். கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று தனது சொந்த ஊரான அறவன்குறிச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் . அப்போது பேசுகையில் மறைந்த தனது தாய் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழுதார் . அவர் பேசுகையில் , சிலிண்டர் விலை 300 இருந்தது 1000 ரூபாய் ஆகிவிட்டது … Read more

ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? பின்னணியில் பாஜக மாநில தலைவரா? ஜோதிமணி எம்.பி கேள்வி!

jothimani

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என்றும் இதன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாரா? எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி ஆகிய 4 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, ஆளுநர் … Read more

இதுபோன்ற மரணங்கள் நெஞ்சை உறையச் செய்கிறது – ஜோதிமணி எம்.பி

கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார்.  கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த துயரநிகழ்வில் … Read more

ஆளுநருக்கு தமிழகத்தின் வரலாறு தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளலாம் – ஜோதிமணி எம்.பி

தமிழ்நாடு யோகிகளால் அல்ல சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது என ஜோதிமணி ட்வீட்.  கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் இப்போது நிற்கும் இந்த தமிழ்நாடு, யோகிகளாலும் சித்தர்களாலும் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மமே இந்த பாரதத்தின் அடையாளம் என தெரிவித்து இருந்தார்.  இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு யோகிகளால் அல்ல சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது. … Read more

பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல – ஜோதிமணி எம்.பி

மனுநீதியும்,பாஜகவும் மனிதகுல விரோதிகள் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சையான நிலையில், ஆ.ராசாவின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல. மனுநீதியே. மனுநீதி பெண்களை … Read more

பாஜகவின் பி டீம் வேலையை சீமான் சரியாகச் செய்கிறார்! – ஜோதிமணி எம்.பி

நரேந்திர மோடியை காப்பாற்ற வேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை விமர்சித்து  பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ 50 வருடத்தில் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை ஒருவர் 5 மாதங்கள் நடந்து எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இது வேடிக்கையாக இல்லையா? காலையும் ,மாலையும் அவர் மேற்கொள்வது நடை பயிற்சியே, இதில் என்ன தேச ஒற்றுமை இருக்கிறது என … Read more

விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் – ஜோதிமணி எம்.பி

விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். 3வது நாளான இன்று  நடைபயணத்தை இன்று காலை 7 மணிக்கு தொடங்கினார். சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் அமந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் … Read more

இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம் – ஜோதிமணி எம்.பி

தேசிய கொடி இயக்கம் மூலமாகவும் பிரதமர் மோடி காசு பார்க்கிறார் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.   வரும் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசப்பற்றிற்கும், பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்.’ … Read more

காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – டி.ஆர் பாலு கண்டனம்

காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கண்டனம். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று தொடங்கிய மக்களவையில் அதே சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக … Read more

வயிற்றெரிச்சல் தான் இப்படியெல்லாம் பேசச்சொல்கிறது..! நயினார் நாகேந்திரன் கருத்து குறித்து ஜோதிமணி எம்.பி ட்வீட்..!

பாஜகவுக்குத் தெரிந்ததெல்லாம். பிரிப்பது மட்டும் தான் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  நேற்று திமுகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆந்திரா,தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம்.ஆகவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி … Read more