எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி…! நீதிமன்றத்தில் நிரூபிப்போம் : ஜெயக்குமார்

எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்  சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்றம் இருக்கும் போது, காவல்துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சிப்பதாகவும், எங்கள் மீதான குற்றசாட்டுகள் தவறு  என்பதை நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.