சசிகுமார் – சத்யராஜ் இணையும் புதிய படத்தை இயக்க உள்ள ரஜினிமுருகன் இயக்குனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என மூன்று சிவகார்த்திகேயன் படங்களையும் இயக்கி விட்டு அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க தயாராகி உள்ளார். இவர் முதலில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையைக் கூறினார். அந்த கதை சேதுபதிக்கு பிடித்துவிட்டது. இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க குறைந்தது 1 வருடதிற்கும் மேலாகும் என விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.

அதற்குள்ளாக இயக்குனர் பொன்ராம் நடிகர் சசிகுமாரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். சசிகுமாருக்கு கதை கூறி அவரிடம் சம்மதம் வாங்கி உள்ளார் இயக்குனர் பொன்ராம். இப்படத்தில் முக்கிய ரோலில் ராஜ்கிரண் முதலில் நடிப்பதாக இருந்தது.  தற்போது அவரிடம் கால்சீட் இல்லாத காரணத்தால், சத்யராஜ் இப்படத்தில் இணைந்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.