பரபரப்பு…”பாஜகவில் சசிகலா? ” – நயினார் நாகேந்திரன் சொன்ன முக்கிய தகவல்!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை சசிகலா மேற்கொண்டு வரும் நிலையில்,அவரை மீண்டும் அதிமுக சேர்த்துக் கொள்வதற்கு அதிமுகவினர் சிலர் ஆதரவாகவும்,சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே,”எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது;அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருக்கிறது.அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்,ஆனால்,அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது”,என்று சசிகலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சசிகலா அவர்கள் பாஜகவில் இணைந்தால் நிச்சயம் வரவேற்போம் என்று பாஜகவைச் சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”சின்னம்மாவை சேர்த்து கொண்டால் அதிமுக இன்னும் வலுவாக இருக்கும்.மாறாக,அவர் பாஜகவிற்கு வந்தால் அவரை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம்.அவரது நிச்சயமாக எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.இதனால்,அதிமுக அவரை வரவேற்க இல்லையென்றால் பாஜகவில் நாங்கள் வரவேற்போம்’,என்று தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,நயினார் நாகேந்திரனின் இத்தகைய அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment