ராகுல் காந்தியின் பேச்சு அரசியல் களத்தை அதிரவைக்கிறது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!

ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைக்கிறது. – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை யாத்திரை தொடங்கி 100வது நாளை கடந்து தற்போது தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகிறது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கள் அரசியல் களத்தை அதிர வைக்கிறது என கூறினார்.

மேலும், ராகுல் காந்தி தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ பேசவில்லை, சித்தாந்த அரசியலை பேச உள்ளார். அதனால்தான் அவர் சிலரால் கடுமையாக எதிர்க்கப்படுகிறார். சில சமயங்களில் ராகுல்காந்தியின் பேச்சு நேருவை போல இருக்கிறது எனவும் பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment