பிரதமரே உங்களை தொந்தரவு செய்வது கருப்பு நிறமா? அல்லது அதை அணிந்த மனிதனா? – ஜோதிமணி எம்.பி

பிரதமரே உங்களை தொந்தரவு செய்வது கருப்பு நிறமா? அல்லது அதை அணிந்த மனிதனா? என ஜோதிமணி எம்.பி ட்வீட். 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள், ராகுல் காந்தி அவர்கள் கருப்பு சட்டை அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, அன்பிற்குரிய நரேந்திரமோடி அவர்களே உங்களைத் தொந்தரவு செய்வது கருப்பு நிறமா?அல்லது அதை அணிந்திருப்பவரா?  என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment