பாஜகவும்,ஊழலும் பிரிக்க முடியாதவை – ஜோதிமணி எம்.பி

அண்ணாமலையின் 5 லட்ச ரூபாய் கடிகாரம்,மோடியின் 10 லட்ச ரூபாய் கோட் இவை எல்லாம் எளிமை,நேர்மையின் அடையாளம் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  அண்ணாமலையின் 5 லட்ச ரூபாய் கடிகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இதுகுறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அண்ணாமலையின் 5 லட்ச ரூபாய் கடிகாரம்,மோடியின் 10 லட்ச ரூபாய் கோட் இவை … Read more

தம்பி உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் – ஜோதிமணி எம்.பி

புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வாழ்த்து.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை , … Read more

இப்படியொரு மோசமான,இரக்கமற்ற அரசை இந்தியா கண்டதில்லை – ஜோதிமணி எம்.பி

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என ஜோதிமணி எம்.பி கேள்வி  2018-19ல் கேரளா பெருவெள்ளத்தின்போது நிவாரணமாக வழங்கப்பட்ட, 89 டன் அரிசிக்கான தொகை, 205.81 கோடியை தரச்சொல்லி கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, திரு.மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை … Read more

இதுபோன்ற மரணங்கள் நெஞ்சை உறையச் செய்கிறது – ஜோதிமணி எம்.பி

கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார்.  கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த துயரநிகழ்வில் … Read more

ஆளுநருக்கு தமிழகத்தின் வரலாறு தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளலாம் – ஜோதிமணி எம்.பி

தமிழ்நாடு யோகிகளால் அல்ல சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது என ஜோதிமணி ட்வீட்.  கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் இப்போது நிற்கும் இந்த தமிழ்நாடு, யோகிகளாலும் சித்தர்களாலும் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மமே இந்த பாரதத்தின் அடையாளம் என தெரிவித்து இருந்தார்.  இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு யோகிகளால் அல்ல சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது. … Read more

கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது – ஜோதிமணி எம்.பி

லவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவை கார் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் … Read more

இது அநாகரிகத்தின் உச்சம்… அதிகார போதையின் வெளிப்பாடு – அண்ணாமலை கருத்துக்கு ஜோதிமணி எம்.பி ட்வீட்

இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம் வெளிப்படுவது வருத்தத்திற்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை, எனது செருப்புக்கு சமமில்லை என தெரிவித்திருந்ததற்கு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அரசியலில் கடுமையான கருத்து மோதல்கள் இருக்கலாம்.ஆனால் அது அநாகரிகமாக,கண்ணியக்குறைவாக இருக்கக்கூடாது. மிகச்சிறந்த அறிவாளியும், நிர்வாகியுமான நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை எனது … Read more

பிரதமரே உங்களை தொந்தரவு செய்வது கருப்பு நிறமா? அல்லது அதை அணிந்த மனிதனா? – ஜோதிமணி எம்.பி

பிரதமரே உங்களை தொந்தரவு செய்வது கருப்பு நிறமா? அல்லது அதை அணிந்த மனிதனா? என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள், ராகுல் காந்தி அவர்கள் கருப்பு சட்டை அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, அன்பிற்குரிய நரேந்திரமோடி அவர்களே உங்களைத் தொந்தரவு செய்வது கருப்பு … Read more

இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம் – ஜோதிமணி எம்.பி

தேசிய கொடி இயக்கம் மூலமாகவும் பிரதமர் மோடி காசு பார்க்கிறார் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.   வரும் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசப்பற்றிற்கும், பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்.’ … Read more

மோடி அரசின் அமலாக்கத்துறைக்கெல்லாம் அஞ்சாமல் காங்கிரஸ் கட்சி களத்தில் நிற்கும் – ஜோதிமணி எம்.பி

மக்கள் விரோத மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயாமல் போராடுவோம் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா … Read more