மாமல்லபுரம் சந்திப்பு- முதல்வர் பழனிசாமியை பாராட்டிய பிரதமர் மோடி

சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சிறப்பான ஏற்பாடுகள் செய்ததற்கு  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி , சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்ததற்கு  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வரவேற்பும், உபசரிப்பும் கலாச்சாரத்தையும் மரபையும் பிரதிபலித்ததாக பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.