தூத்துக்குடியில் கனிமொழி…கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பு…!!

தூத்துக்குடி மாவட்ட கிராம சபை கூட்டடங்களில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் மக்களிடம் செல்வோம் , மக்களிடம் சொல்வோம் , மக்களின் மனதை வெல்வோம்  என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம் ஊராட்சி பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்பட பல்வேறு திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் கிராம சபை கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் நேற்று (26.01.2019) வீரபாண்டியன்பட்டணம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், மீரான்குளம், இராமானுஜம்புதூர், கருங்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு  மக்களிடையே பிரச்சனைகளை பேசினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment