கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்படும். மதுரை, தஞ்சை, நெல்லையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ பிரிவை தொடங்கியதில் மகிழ்ச்சி.மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் ரூ.200 கோடி மதிப்பில் மருத்துவ சேவை மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் ஒரு மாதத்தில் சுமார் 89,000பேர் சிகிச்சை பெற விண்ணப்பம் செய்துள்ளனர்  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment