நாங்கள் அன்பையும் நம்பிக்கையையும் வழங்கினோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தூத்துக்குடி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிட்டார் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை.அதேபோல் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டார்.
இந்நிலையில் தேர்தல் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே. நாங்கள் அன்பையும் நம்பிக்கையையும் வழங்கினோம்.ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு பணத்தை வழங்கியுள்ளனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.