எந்த காலத்திலும் இவர்களுடன் கூட்டணி கிடையாது – சீமான் ஆவேச பேச்சு

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை மண்ணடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய நிலத்திலேயே ஒரே ஒரு மதம் தான் இதுவரை ஆர்எஸ்எஸ், பாஜகவை வைத்து சண்டை போடுகிறது. காங்கிரஸ் என் இனத்தின் எதிரி, பாஜக மானுடர்குலத்தின் எதிரி.

என் இனத்திற்கு இந்திய காட்சிகள் அவசியம் இல்லை. இது என் கொள்கை முடிவு கோட்பாடு. இந்தியாவிற்காக ஒரு கட்சியே தேவையில்லை என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை வரைவு. மாநிலத்தில் அந்தந்த மாநிலம் காட்சிகள் ஆளுவோம். இந்தியாவை ஆளும் போது கூடி பேசி ஆளுவோம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி. இங்கு கூட்டணி ஆட்சி இருக்கு தவிர கூட்டாட்சி இல்லை.

இன்றைக்கு பாஜகவுடன் அதிமுக இருக்கு, முன்பு திமுக பாஜகவுடன் இருந்தது. நாளைக்கு இருக்காது என்று யாரு உறுதி அளிக்கிறீங்க, தலைவர், பொதுச்செயலாளர், இளைஞரணி தலைவர் என யார் உறுதி அளிக்கிறீங்க. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது நடக்கும், மத்தியில் இருப்பவர்களுடன் அனுசரித்து போனால்தான் மாநிலத்திற்கு நலத்திட்டங்களை கொண்டுவரமுடியும் என்று பேசுவார்கள்.

எந்த காலத்திலும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுதாவுடன் கூட்டணி கிடையாது. தனித்துதான் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். ஒரே ஒரு முறை முக ஸ்டாலினை சொல்ல சொல்லுங்கள் எந்த காலத்திலும் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று சொல்ல சொல்லுங்கள், எப்படி நம்ப முடியும். அவர்தான் சந்திரமுகியாக மாறிவிட்டார் என்று சீமான் விமர்சித்து பேசியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்