,

நித்தியானந்தா செய்யும் புதிய செயல்!செயலுக்காக சத்ரு சம்ஹார பூஜை…..

By

மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவுக்கு எதிரான வழக்குகளும் அவருக்கு பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகின்றன.

இப்படி பல்வேறு தரப்பிலும் அவருக்கு பாதகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தனது எதிரிகளை அழிக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்ய நித்தியானந்தா முடிவு செய்தார். அதன்படி தனது சீடர்கள் புடை சூழ திருச்செந்தூர் வந்த நித்தியானந்தா கடலில் இறங்கி நீராடுவது போல தன்னுடன் அழைத்து வந்த புகைபடகாரருக்கு போஸ் கொடுத்தார்.

முன்னும் பின்னும் சிஷ்யகோடிகளின் அணிவகுப்போடு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் சென்ற நித்யானந்தாவுக்கு திரிசுதந்திரர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

மதுரை ஆதீனமட கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட நித்யானந்தாவை, விஐபி தரிசன வழியில் சிஷ்யர்களுடன் அழைத்து சென்றனர். கோவிலுக்குள் நுழைந்த நித்தியானந்தா இரண்டாவது பிரகாரத்தில் சூரசம்ஹாரமூர்த்தி சன்னதி அருகே அமர்ந்து தனது எதிரிகளை அழிக்க சத்ரு சம்ஹார பூஜை செய்தார் .

திரிசுதந்திரர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்ட இந்தப் பூஜையால் தனது எதிரிகள் பலம் இழந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பூஜையை முடித்துக் கொண்டு காரில் ஏறி பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023