5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கோரிக்கை.

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் புகாரளித்தார்.


கூகுள் பேய் மூலம் நவீன முறையில் திமுகவினர் பணம் பரிமாற்றம் செய்ததாகவும்,  வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஜனநாயகத்தை விட பண நாயகத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது திமுக என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

 

author avatar
murugan