யார் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது-விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்தான் உள்ளார்.விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று தெரிவித்தார்.மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன் என்று தெரிவித்தார்.சீமானின்  இந்த கருத்து சினிமா மற்றும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த  வகையில்  அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து  ஆகும்.ஆனால் விஜய் அரசியலுக்கு வந்தாலும்,யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.