மும்பையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு???

சிபிஐ போலீஸார், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை,  மும்பை அழைத்துச் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிப்ரவரி 28-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை  சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனையடுத்து, டெல்லி அழைத்துச் சென்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  ஒருநாள் சிபிஐ காவலில் எடுத்தனர்.

ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒருநாள் காவல் முடிந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை மும்பை அழைத்துச் சென்று சிபிஐ போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குத் தொடர்புடைய முக்கியமான பல பணவர்த்தனைகளும் பேச்சுவாரத்தைகளும் மர்மங்களும் மும்பையில் நடந்துள்ளதால், மும்பையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

author avatar
Dinasuvadu desk

Leave a Comment