கருணாநிதி, கனிமொழி குறித்து முகநூலில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி அவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் கருணாநிதி, கனிமொழி குறித்துமுகநூலில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகாரில் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கனியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வேலுசாமி ஏப்ரலில் தந்த புகாரில் கருத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.