சட்டமன்ற குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை ராஜினாமா செய்தார்.அதன்படி ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அம்மாநில கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.இதனை கவர்னர் ஏற்று கொண்டுள்ள நிலையில்  ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக 30 பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் ஆந்திரா அமராவதியில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment