வஞ்சகன் தினகரன் உடன் சேர்ந்து ஓபிஎஸ் பாழாய் போய்விட்டார்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்.!

ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,’ ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என பாடிவிட்டு வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து பாழாய் போய்விட்டார்.’ என்று கூறினார்

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியர் அவர்களின் 105-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியில்அமைந்துள்ள ராமசாமி படையாட்சியார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்கள் ஓபிஎஸ் பற்றி கேட்கையில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். அதாவது, “ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒரு கோஷ்டி என்றும். ஓபிஎஸ் கட்சி அல்ல. கோஷ்டிக்கும் கட்சிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.’ என்று தனது கருத்தை தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ‘ஓபிஎஸ்-க்கு மக்கள் ஆதரவும் இல்லை, தொண்டர்கள் ஆதரவும் இல்லை. ’சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என பாடிவிட்டு வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பாழாய் போய்விட்டார்.’ என விமர்சனம் செய்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment