சீனாவில் பரபரப்பு.! 712 அடி உயரமுள்ள 42 மாடி கட்டடத்தில் பெரும் தீ விபத்து…

சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் தீவிபத்தில் சிக்கியது. இந்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.  

சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 42 மாடி கட்டடம் கீழ் தளத்தில் இருந்து மேல் தளம் வரையில் முழுவதுமாக தீயிற்கு இறையாகியுள்ளது.

இந்த கட்டடத்தின் உயரம் 715 அடியாகும். இந்த கட்டத்தில் தான் சீனா அரசு கட்டுப்பட்ட்டில் உள்ள சீன தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ராட்சச தீயை அணைப்பதற்கு 280 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கட்டடத்தில் பற்றி எரியும் தீ விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வெகு வைரலாகி வந்ததை தொடர்ந்து இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment