வஞ்சகன் தினகரன் உடன் சேர்ந்து ஓபிஎஸ் பாழாய் போய்விட்டார்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்.!

ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,’ ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என பாடிவிட்டு வஞ்சகன் தினகரனோடு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து பாழாய் போய்விட்டார்.’ என்று கூறினார் சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியர் அவர்களின் 105-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சென்னை கிண்டியில்அமைந்துள்ள ராமசாமி படையாட்சியார் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் ஓபிஎஸ் பற்றி கேட்கையில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். … Read more

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த அதிகாரமும் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த சில நாட்களாக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாசிங் மிசின் தருவதாக கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங்மெஷின் தருவதாக கூறப்படுவது உண்மையான தகவல் அல்ல என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் … Read more

உணவுத்துறை அமைச்சர் ஆர்வம் காட்டியதன் விளைவுதான் இது – தினகரன்

டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் அமமுக  பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பழனிசாமி அரசின் அலட்சியத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது மிகுந்த … Read more

நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது – தினகரன்

நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது என்று தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள … Read more

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமனம்

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி கட்சிக்கு  எதிராக பேசி வந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டார் .அதாவது  கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார். இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.இதன் பின்னர்  அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி. இந்நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக  வா. புகழேந்தி   நியமனம் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் – தினகரன்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்  என்று  தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.ஆனால் இதற்கு இடையில் அமமுகவில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினாரக்ள்.ஏற்கனவே தேர்தல் தோல்வி ஒரு புறம் அமமுகவை துரத்த மறுபுறம் முக்கிய நிர்வாகிகள் விலகல் அவரை துரத்தியது.இதன் விளைவுகளால் சமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி … Read more

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது – தினகரன்

பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியமாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இன்று  2020 – 2021-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  தமிழக சட்டசபையில்  துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் பல்வேறு  துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவித்தார்.பன்னீர் செல்வம் 10-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,  தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் … Read more

ரஜினி அவரிடம் கேட்டு பேசியிருக்கலாம் – தினகரன்

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.  பெரியார் குறித்து நடிகர் ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை அணியப்பட்டது என்று ரஜினி பேசினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஆனால் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ரஜினியின் இந்த பேச்சிற்கு எதிராக  தமிழகத்தில் பல … Read more

அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு-தேர்தல் ஆணையம், தினகரன் பதிலளிக்க உத்தரவு

தினகரன் கட்சியை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது,  நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது நீதிபதி கேள்வி எழுப்பினார். அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்? என்றும் கேள்வி எழுப்பினார். கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு பதிவு குறித்து … Read more

காலியாகிறது தினகரன் கூடாரம் ! நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய புகழேந்தி முடிவு

அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர். அமமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தினகரன் மற்றும் புகழேந்தி  இருவருக்கும்  இடையே கருத்து மோதல்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் அம‌முக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் … Read more