தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் குறைந்து, சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது..! முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் குறைந்து, சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலுரை கூறுகையில், தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.முதியோர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் குறைந்து, சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்காக பொது இடங்களில் கேமராக்கள் பொருத்துவதில், இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது. கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ரூ.308 கோடி செலவில் 3087 பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment