நீங்கள் ஆர்டர் மட்டும் செய்தால் போதும் …!உங்கள் வீடு தேடி வரும் டீசல் …!.டெலிவரி கட்டணம் கிடையாது …!

டீசல் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளையடுத்து ஆன்லைனில் டீசல் விற்பனை செய்வது என்று  முடிவெடுத்தது. அந்த வகையில் நாட்டிலேயே முதன் முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இன்று மாலை கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில்  ஆன்லைனில் டீசல் விற்பனை துவங்கியது.
Image result for டீசல் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து டெலிவரி
மேலும் இது தொடர்பாக  இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்த தகவலில்,  குறைந்தபட்சம் 200லிட்டரில் இருந்து வாடிக்கையாளர்கள் டீசல் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும். REPOSE APP என்ற செயலி மூலம் டீசலை ஆர்டர் செய்யலாம்.டெலிவரிக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment