விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை, பிரதமர் நரேந்திரமோடியை தூங்க விட மாட்டேன் …! ராகுல்காந்தி உறுதி

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை, பிரதமர் நரேந்திரமோடியை தூங்க விடப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிஸ் கட்சி மத்தியபிரதேசம் , சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.இந்நிலையில் மத்தியபிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் முதல்வராகி தன்னுடைய முதல் கையெழுத்துதாக அம்மாநில விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தார்.
Image result for MODI NOT SLEEPING
அதேபோல் சத்தீஸ்கர் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என  அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பூபேஷ் பாகல் தெரிவித்தார்.
Image result for MODI NOT SLEEPING
இந்நிலையில் விவசாய கடன் தொடர்பாக  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து  தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை, பிரதமர் நரேந்திரமோடியை தூங்க விடப்போவதில்லை.விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய, ஏன் தாமதம் ஆகிறது என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், இதனை வலியுறுத்திய  போதிலும், பிரதமர் மோடி, இதுவரை, விவசாயிகளின் கடனில், ஒரு ரூபாயை கூட, தள்ளுபடி செய்யவில்லை என்றும்  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Comment