கூட்டணிக்காக களைத்துப் போய்விட்டேன்….அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி…!!

பாராளுமன்ற தேர்தலில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் , காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் தொடர் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை உடன்படச் சொல்லி களைத்துப் போய்விட்டேன் என்று  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்றது.இந்நிலையில் மத்தியில் ஆட்சியை மீண்டும் தொடர வேண்டுமென்று பாரதீய ஜனதாவும் , மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து தீவிரமாக கூட்டணி மற்றும் பிரசாரம் என முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறுகையில் , பா.ஜ.க. வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி விடாமல் இருக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு பா.ஜ.க. வேட்பாளருக்கும் எதிராக களமிறக்கும் வேட்பாளர் வலுவான கூட்டணி வேட்பாளராகத்தான் இருக்க வேண்டும் . கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை உடன்படச் சொல்லி களைத்துப் போய்விட்டேன் என்று தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment