தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது..! அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தில் நடப்பாண்டில், 100 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள், ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என 1,311 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மூடும் எண்ணம், அரசுக்கு இல்லை. பள்ளிகளுக்கு தேவையான வசதிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு வழி ஏற்படுத்தி வருகிறோம் என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment