ஸ்டாலினுக்கு தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயார்-அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலினுக்கு தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  முதலீடுகள் ஈர்க்கப்பட்டது தொடர்பாக, ஸ்டாலினுக்கு தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக தான் உள்ளது. முதல்வர் வெளிநாட்டு பயணம் மூலம் நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வரும் .

ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தால் எந்த பயனும் இருக்காது என கூறினார்.முதல்வர், அமைச்சர்கள் ரகசியமாக வெளிநாடு செல்லவில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கடைசி ஆசையும் கூட தவிடுபொடியாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.