#Breaking:அரசு வேலைவாய்ப்பு;இவர்களுக்கு MBC பிரிவில் இட ஒதுக்கீடு – தமிழக அரசு!

அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 3 ஆம் பாலினத்தவரான சுதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.மேலும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில்,மாநில அரசும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,”அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(MBC) வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அதன்படி,அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.எனவே, சம்மந்தப்பட்ட 3 ஆம் பாலினத்தவர் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும்.அதே சமயம் பெண் என்பதன் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட்டால் அவர்களுக்கு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்று ஏற்கனவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Leave a Comment