#Justnow:கருமுட்டை விவகாரம் – பாதிக்கப்பட்ட சிறுமி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி?..!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர்,கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த பின்,வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கோவை சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஈரோடு சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.விஷம்(பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனத்தை) அருந்தி தற்கொலைக்கு முன்ற நிலையில்,ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து சிறுமியிடம் காவல்துறையினர் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment